Thursday, January 21, 2010

கல்வி உதவித் தொகை பற்றிய இணையம்

ல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என கல்விக்கு ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

அவை எல்லாம் எத்தனை ஏழை மக்களுக்கு சென்று சேருகின்றன. அல்லது எத்தனை ஏழை மாணவர்கள் அது பற்றி அறிந்துள்ளனர்.

இந்த குறையைப் போக்க மும்பையில் உள்ள கல்லூரி மாணவர்கள் 200 பேர் சேர்ந்து ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

www.a2zscholarships.com

என்ற இந்த இணையத்தில் மாணாக்கர் படிக்கும் துறை, வீட்டின் வருட வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த இணையதளத்தில் மாணாக்கரது பெயர் உள்ளிட்ட தகவல்களை அளித்தால் போதும். அவர்களுக்கு தகுதியுடைய அனைத்து கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களையும், அதை வழங்கும் அமைப்புகள் பற்றிய தகவல்களையும் பெறலாம்.

அதில் உங்களுக்கேற்றதை தேர்வு செய்து அவற்றிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

நமது விண்ணப்பத்தை இந்த இணையதளத்தினரே கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனங்களும் தமது தகவல்களை இந்த இணையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.




Monday, January 4, 2010

இயற்கையின் வரப்பிரசாதம் இளநீர்


கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு.
சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.


இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.


ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.