Monday, December 29, 2008

My Photos






















பொன்னான மொழிகள்

விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக, கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.

உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம், அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.

நித்திரை கொள்பவனை எழுப்பலாம் - ஆனால் நித்திரைபோல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

குறையப் பேசு, நிறையக் கேள்.

மனதில் பகைமையை அடக்கி வைத்தல் நேரடிப் போரைவிடக் கொடியது.

எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.

தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.

பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.

இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.

அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.


தோல்வியை - கழியுங்கள்
முயற்சியை - கூட்டுங்கள்
வெற்றியை - பெருக்குங்கள்
பலனை - வகுத்துவிடுங்கள்
புரிந்ததை- விரிவுபடுத்துங்கள்
புரியாததை- சுருக்குங்கள்
சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள்
உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள்

காலண்டரில் கண்ட முத்துக்கள்

திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு

செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.

புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.

சனி: அன்பளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.

ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.

பழைய பொன்மொழிகள்

கையிலே சுத்தியல் தான் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்.

***

யாருடைய சொல்லும் செயலும் பிறரை துன்புறுத்தவில்லையோ அவனே மனிதன்.

***

மதுக்கடையில் - மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன்.

***

மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன் துணையாக இருப்பவள்.

***

குடிப்பதில் உள்ள தீமைகளைப் பற்றிப் படித்ததும், நான் விட்டுவிட்டேன்.. படிப்பதை.

***

சிரித்தால் உலகம் கூட சிரிக்கும். குரட்டைவிட்டால் தனியாகத்தான் தூங்க வேண்டும்.

***

தேவையான வயது வரும்முன்னர் உங்கள் குழந்தைகளை வண்டியோட்ட அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால் அவர்களால் எப்போதுமே வண்டி ஓட்ட முடியாது.

***

பியூட்டி பார்லர் முன்பு இருந்த வாசகம். 'இங்கிருந்து வெளியே செல்லும் அழகிகளைப் பார்த்து விசிலடிக்க வேண்டாம். அவள் ஒருவேளை உன் பாட்டியாக இருக்கலாம் '

***

துணிச்சல் இருக்க வேண்டும் - ஆமிர்கான்

சரி என்று தோன்றுவதை செய்யும் துணிச்சல் இருக்க வேண்டும் - ஆமிர்கான்

நமது நாட்டில் உள்ள அத்தனை இளைஞர்களும் ஒன்று சேர்ந்து ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வலிமையான, தூய்மையான, கெளரவமான, புத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு தலைமை வர வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்குவோருக்கு நாம் முழுமையாக ஆதரவு தரலாம்.

மும்பையில் நடந்த மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் மக்கள் மனதில் ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அது மேலோங்கி விட நாம் அனுமதிக்கக் கூடாது. அவற்றை தூக்கி தூர எறிந்து விட்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய இந்தியாவைப் படைக்க முயல வேண்டும்.

தீவிரவாதிகளின் நோக்கம் தோற்க வேண்டும், அவர்களுக்கு தோல்வி கிடைக்க வேண்டும் என நாம் உண்மையிலேயே விரும்பினால், இந்த வெறுப்புணர்ச்சியை நாம் விட்டு விட்டு அன்புப் பாதைக்குத் திரும்ப வேண்டும். தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் என்று போகாமல் அன்பின் வழியில் நாம் செல்ல முன்வர வேண்டும்.

அவர்கள் தாக்கி விட்டார்கள், பதிலுக்கு நாமும் தாக்குவோம் என்று நாம் இறங்கினால் அது தீவிரவாதத்திற்குக் கிடைத்த வெற்றியாகி விடும். மாறாக அன்பையும், அமைதியையும் நாம் நமது இதயங்களில் சுமந்தோமானால், நிச்சயம் அது தீவிரவாதிகளுக்கு விழும் மாபெரும் அடியாக இருக்கும்.

நமக்குள் அன்பும், அமைதியும், பரஸ்பர நம்பிக்கையும் வளர அனுமதிக்க வேண்டும். இதை நாம் பலவீனமாக கருதி விடக் கூடாது. மாறாக, அதுதான் நமது மாபெரும் பலமாக கருதப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் தோற்று விட்டன

தீவிரவாதத்தைத் தடுப்பதில் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தோற்று விட்டன. சமீப காலங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் மூலம் நமக்குக் கிடைத்துள்ள பாடம் என்னவென்றால், தீவிராதிகளுடன் அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது, அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்கக் கூடாது என்பதுதான். அவர்களை அரசுகள் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியா தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேசாது, அவர்கள் குறித்து அக்கறை காட்டாது என்பதை நமது அரசுகள் தீவிரவாதிகளுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். இதை நாம் மிகத் தெளிவாக சொல்லியாக வேண்டும்.

இதை எளிதாக விளக்குவதானால், எதிர்காலத்தில் நானோ அல்லது எனது குழந்தைகளோ தீவிரவாதிகளின் பிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டால், என்னைப் பற்றியோ எனது குழந்தைகளைப் பற்றியோ கவலைப்படாதீர்கள், தீவிரவாதிகளை முதலில் கொல்லுங்கள் என்று நான் சொல்ல வேண்டும். நான் சொல்வேன்.

நமது நாடு மிகப் பெரியது. நமது மக்கள் நல்லவர்கள், அன்பானவர்கள். அவர்களுக்காக, அந்த அன்பு உள்ளங்களுக்காக நான் எனது உயிரை தியாகம் செய்ய தயார். நமது நாடும், அதன் பாதுகாப்பும், நமது மக்களும்தான் எனக்கு முக்கியம். எனவேதான் சொல்கிறேன், தீவிரவாதிகளுடன் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி நமது அரசுகள் பேசக் கூடாது, பேசவே கூடாது.

ஆனால் தீவிரவாதத் தாக்குதல்களை சமாளி்கும் திறமை நமது அரசியல் கட்சிகளிடம் மிகவும் குறைவாக உள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த விஷயத்தில் தோற்று விட்டன. சமீபத்திய தாக்குதலில் இது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

தொடர்ந்து நமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதைத் தடுக்கவும் முடியவில்லை, அவர்களை ஒடுக்கவும் முடியவில்லை.

மும்பை சம்பவம் காங்கிரஸின் இயலாமையைக் காட்டுகிறது என்றால், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்குக் கடத்தப்பட்ட சம்பவம் பாஜக ஆட்சியின் இயலாமையைக் காட்டியது.

பாஜக ஆட்சியில், காந்தஹார் கடத்தல்காரர்களுடன் பாஜக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் 3 மிகக் கொடிய தீவிரவாதிகளை விடுவித்து மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.

இப்படி விடுதலையான அவர்கள் இன்று நம்மை மீண்டும் மீண்டும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, பிராந்திய கட்சிகளும் கூட ஒரு வகையில், தீவிரவாதத்தை வளர்த்து விட்டதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தீவிரவாதம் என்றால் ஏ.கே. 47 துப்பாக்கியோடு கையில் திரிவது என்று மட்டும் அர்த்தம் அல்ல. சாலையில் போவோரை தாக்கி கொலை செய்வது, கல்வீசித் தாக்குவது, அப்பாவிகளை அடித்து உதைப்பது, வன்முறையில் ஈடுபடுவது. இவையெல்லாமும் கூட தீவிரவாதம்தான். இவையெல்லாம் சாதாரண ஜனங்களின் மனதில் பதிந்து அவர்களிடையே தீவிரவாத எண்ணத்தை வளர்க்க உதவுகின்றன.

மேலும், வாக்களிக்கும் உரிமையை நமது மக்கள் சரிவர பயன்படுத்துவதில்லை. இப்படிச் செய்யாமல் இருப்பதன் மூலம் ஓட்டுப் போடாத மக்களும் கூட ஒரு வகையில் குற்றவாளிகள்தான்.

என்னைப் பொருத்தவரை, மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறீர்களா?. முதலில் நீங்கள் மாறுங்கள். தானாகவே நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வந்து சேரும்.

நமக்கு தவறு என்று தெரிவதை தவறு என்று சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும். சரி என்று தோன்றுவதை செய்யும் துணிச்சல் இருக்க வேண்டும். தனி நபர் நலனுக்காக செயல்படும் போக்கை தூக்கிப் போட வேண்டும். அனைவருக்கும் பாதகமில்லாமல் நடக்க முயற்சிக்க வேண்டும்.

இது ஒவ்வொருவருக்குள்ளும் வரும்போது நிச்சயம் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றமும் கூடவே வரும்.

-ஆமிர்கான்
நன்றி : தட்ஸ் தமிழ்

Friday, December 26, 2008

துளிகள்

1) சோம்பித் துருப்பிடித்துப் போவதை விட உழைத்து தேய்ந்து போவது மேல்.

2) மனிதன் உழைக்கப் பிறந்துள்ளான், பறவை பறக்கப் பிறந்துள்ளது.

3) நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது - நாம் முயற்சி செய்கிற வரையில் நமக்கேத் தெரியாது.

4) ஆர்வம், கொழுந்து விட்டு எரியும் ஆசை, நாட்டம் பெற்றிடுக.

5) ஒரே சமயத்தில் இரு முயல்களை பிடிக்க முயன்றால் இரண்டுமே தப்பியோடிவிடும், எனவே ஒரு துறையில் மட்டுமே முழு மூச்சுடன் கவனம் செலுத்தி முழுமைத்திறன் பெற்றிடுக.

6) எதிலும் வெற்றியைப் பெறத் தொடர் முயற்சி தேவை.

7) காலமும், கடலலையும் எதற்காகவும் காத்திராது. சாதிக்கப் பிறந்த நீ முயற்சியைத் தொடர்வாயாக.

8)சாதனைக் குறிக்கோளுக்கு வானமே எல்லை

9) முட்டுக்களைகளை முறித்தெறி

10) என்னால் முடியும் என உறுதி கொள், எண்ணங்களே செயலுக்கு அடிப்படை.

Wednesday, December 17, 2008

நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !

நிறைந்த கல்விமான்களும் அறிவாளிகளும் ஆற்றல்மிக்கவர்களும் இல்லாத காரணத்தினால்தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியாமல் போகிறது என்று கூறுவதைவிட பண்பாடும் ஒழுக்கமும் மனிதத் தன்மையும் இல்லாதவர்கள் நிறைந்திருப்பதால்தான் ஒரு நாடு முன்னேற்றமடையாமல் இருக்கிறது என்று கூறுவதுதான் உண்மை . - மார்க்கோஸ்

சிலபேர் கல்விமான்களாக இருப்பார்கள் ஆனால் மனிதப் பண்பாடு இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களை விடக் கொஞ்சமாகப் படித்து கொஞ்சமாக அறிவு பெற்று மனிதப்பண்பு நிறைந்தவர்களால் தான் ஒரு சமுதாயம் நல்லப்படியாக வளர முடியும்.

முயற்சி

சிந்தனை, தொழில், செல்வம் இவைகளில் வீரப்பரம்பரை நாம் என்று சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் எங்கே தவறு செய்தோம்.

எங்கே நுலிழையைத் தவற விட்டோம்.

ஏன் ஏன் என கொஞ்சம் சிந்தியுங்கள்.

என்னைத் தவிர யாரும் என்னைக் கெடுக்க முடியாது.

குறுக்கு வழியில் லாபமடையவே நம் சிந்தனை செல்கிறது. சுயமாகச் செயல்புரியும் ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவதில் நாம் வெற்றி பெறாததே இதற்குக் காரணம்.

எது உண்மை?

விருப்பு வெறுப்பின்றி உண்மை நாடும் பேரவாவுடன் நாம் இவற்றிற்கு விடை காண வேண்டும்.

நல்வாழ்வுக்கு நாம் பொறுப்பு. நம் சூழ்நிலைக்கு நாம் பொறுப்பு நம் முன்னேற்றத்திற்கு நாம் பொறுப்பு என்ற உணர்வு நம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆள்பவர்கள் மீது பழியைச் சுமத்துகிறோம்.

சிறு வயதிலிருந்து பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் வளர்ந்த பின் மேலதிகாரியிடமும் நாம் அவர்கள் முகம் பார்த்து அவர்களது ஆதரவையும் அனுமதியையும் எதிர் நோக்கி நடந்து கொள்ளுகிறோம்.

இல்லாதவனிலிருந்து இருப்பவன் வரை பொருட்களை இனாமாகப் பெற்றுக் கொள்வதை நியாயம் என்று கருதுகின்றோம். இனாமாகப் பெறுவது யாசகம், இழிவு என்ற மனோபாவம் நம்மிடையே இல்லை. தன் காலிலே நிற்க முடியாத சார்ந்து நிற்கும் ஒரு சமுதாயம், நமது பரம்பரையாய்ப் போய்விட்டது. பிறரிடமிருந்து ஒரு பொருளைப் பெறுவது முறையல்ல. நம் தன்மானத்தில் தலையிடிக்கும் செயல் என்று மேல்நாடுகளில் கருதுகிறார்கள். நம் நாட்டில் இது நியாயமாகப் படுகிறது. ஜப்பானில் ஒரு கடையில் இரு நெருக்கமான உறவினர்கள் பானம் அருந்தினால் அவரவர் செலவை அவரவரே செலுத்துவார்கள். எக் காரணங்கள் கொண்டும் ஒருவர் செலவை மற்றவர் ஏற்கவும் மாட்டார். இதுதான் தன் மானம், எல்லோரும் சமநிலை. எல்லோரும் வாழ வேண்டுமென்ற மனோபாவம். எமது நாடு எமக்காக கடும் உழைப்பு உழைக்கிறோம் என்ற சிந்தனை. களவு கிடையாது.

மனதிற்கும் செயலுக்கும் பெரிய தொடர்பிருக்கிறது உண்மை, நேர்மை சமத்துவம், உதவும் உள்ளம் என்ற நிரந்தர உண்மைகளால் தான் இவ்வுலகம் இயங்குகிறது. இதற்கு மாறாக நம் மனோபாவம் அமையும் போது நம்மால் செயல்பட முடிவதில்லை. காரியங்கள் பூர்த்தி பெறுவதில்லை. பிச்சை மனோபாவம் இந்நிரந்தர உண்மைகளுக்கு மாறுபட்ட செயல்.

சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பியது திட்டமிட்ட செயல். நம்மனத்தில் தோன்றும் எண்ணங்கள் நாளடைவில் திடமான நம்பிக்கையாய் மாறுகிறது. திடமான நம்பிக்கை நம்மிடம் செயலைத் து}ண்டுகிறது. திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயல் நமது பழக்கமாய் மாறுகிறது. நமது பழக்க வழக்கங்களே குண நலன்களாகத் திகழ்கின்றன. நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன.

-ஆத்ம சிந்தனைகள் கருமங்கள் - எண்ணங்கள்
( ஆ. சி. முருகுப்பிள்ளை )

பொது அறிவுக் களஞ்சியம்

• அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.
• வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.
• திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.
• ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.
• உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.
• மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.
• சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.
• ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.
• ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.
• வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.
• காக்காய் வலிப்பு நோய் வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை! கால், கை வலிப்பு என்பதுதான் காக்காய் வலிப்பு என பேச்சுவழக்கில் மருவியது.
• யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.
• தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.
• ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.
• கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.
• சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.
• பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.
• பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
• காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். :) மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
• பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.
• 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.
• நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.
• தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.
• பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.
• பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.
• தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.

அருகம்புல்லின் பயன்கள்

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும்.
குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
வயிற்றுப் புண் குணமாகும்.
இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
புற்று நோய்க்கு நல்ல மருந்து.
உடல் இளைக்க உதவும்இரவில் நல்ல தூக்கம் வரும்.
பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
மூட்டு வலி நீங்கும்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2. நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை

Wednesday, November 12, 2008

Blood Donor Address

Website:
www.bharatbloodbank.com,
where you can search for a particular blood group. You will get thousand of donor addresses.

Erode Blood bank- 0424-2263536 & 2263537

Just SMS:
Now its become easier to get blood. Just type BLOOD space GROUP and send to 9600097000. (Ex: BLOOD 'O' +ve) and ther doner will call you.

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்


11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் - பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் - இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் - எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் - சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.


21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் - குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

வெற்றிக்கு ஏழு குறள்கள்

எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

(Source:- http://www.enganeshan.blogspot.com/)

30 USEFUL TIPS FOR WINNING OVER PEOPLE

1. Avoid beginning with details: give a big picture first.
2. You may take time to develop a relationship but do not overlook it.
3. Emphasize on a good work ethics.
4. Use logic with clearly identified priorities and goals.
5. Be willing to wander off towards new and different directions.
6. Appeal to their role as a consultant and advisor.
7. Do not take others' apparent belligerence personally: be flexible.
8. Appeal to their curiosity: use reason and logic.
9. Keep asking questions about their opinions and ideas.
10. Appeal to established traditional values.
11. Use main stream humor but be generally serious.
12. Appeal to their need to innovate.
13. Make your boundaries clear.
14. Do not interrupt them.
15. Emphasize what is in it for them.
16. Show appropriate emotion to support their position.
17. Allow them time to read and have moments of silence.
18. Do not get too close physically. People generally dislike it.
19. Take their stress seriously but not personally.
20. Be genuine in your intent and purpose. They can see it through your eyes.
21. Appeal to their sense of responsibility.
22. Use the promises of physical rewards such as group dinner etc and keep your word.
23. Avoid a complex vocabulary.
24. Avoid a reference to considerations for others.
25. Notify them if you are going to be late.
26. Emphasize that they are in control.
27. Be a friend even if you are a boss.
28. Be presentable.
29. Do not make personal remarks.
30. Do what you say and say what you do.

Three big mistakes we often commit
Mistake # 1 : Advising before understanding.
Mistake # 2 : Attempting to build / rebuild relationships without changing conduct or attitude.
Mistake # 3 : Assuming that good example and relationship are sufficient.

மென்பொருள் வல்லுனன்

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , "மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு.....



இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன் .
(பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொலைத்த வல்லுனன்)

21 Rules of Life

1. Marry the right person . This one decision will determine 90% of your
happiness or misery.

*********

2. Work at something you enjoy and that's worthy of your time and talent.

*********

3. Give people more than they expect and do it cheerfully.

*********

4. Become the most positive and enthusiastic person you know.

*********

5. Be forgiving of yourself and others.

*********

6. Be generous.

*********

7. Have a grateful heart.

*********

8. Persistence, persistence, persistence.

*********

9. Discipline yourself to save money on even the most modest salary.

*********

10. Treat everyone you meet like you want to be treated.

*********

11. Commit yourself to constant improvement.

*********

12. Commit yourself to quality.

*********

13. Understand that happiness is not based on possessions, power or
prestige, but on relationship with people you love and respect.

*********

14. Be loyal.

*********

15. Be honest.

*********

16. Be a self-starter.

*********

17. Be decisive even it it means you'll sometimes be wrong.

*********

18. Stop blaming others. Take responsibility for every area of your life.

*********

19. Be bold and courageous. When you look back on your life, you'll regret
the things you didn't do more than the ones you did.

*********

20. Take good care of those you love.

*********

21. Don't do anything that wouldn't make your Mom proud.

TOP 7 REASONS WHY I JOINED IT

1) I hated sleep.

2) I had enjoyed my life enough.

3) I couldn't live without tension.

4) I wanted to pay for my sins.

5) I believed in the Bhagwad Geeta principle:” karm karo, phal ki ichha na karo”.

6) Everything in life has a reason; I wanted to prove it wrong.

7) I wanted to take revenge on myself.

Thursday, September 25, 2008

ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....

எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?

அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.

ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.

கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.

A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.

ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.

ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.

தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.

காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.

சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.

கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.

நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.

சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.

உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.

வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.

உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.

நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.

நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.

எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)

ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன்,ஆனாலு‌ம் ஒரு முறை

இவை எ‌ல்லா‌ம் உ‌ங்களு‌க்கு ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன். ஆனாலு‌ம் ஒரு முறை ஞாபக‌ப்படு‌த்‌து‌‌கிறோ‌ம்.

தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள்.

தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள்.

இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது.

மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள்.

மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம்.

மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல வேண்டாம்.

சரியான தூங்கும் பழக்கம் இருப்பவர்களை முதுமை அண்டாது.

காலையில் நடை செல்ல முடியாதவர்களுக்கு மாலை 5 மணில் இருந்து 8 மணி வரை நடை செல்வதற்கு சிறந்த நேரமாகும்.

மின்னூட்டம் போட்டிருக்கும் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம்.

பொதுவாக செல்பேசியில் பேசுவதற்கு இடது பக்க காதைப் பயன்படுத்துங்கள்.

செல்பேசி காதுக் கருவியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு கொடுங்கள்.

உட்கார்ந்தே செய்யும் வேலையாக இருந்தாலும் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.

தொடர்ந்து கணினித் திரையை பார்த்தபடி இருப்பதும் கண்களின் தன்மையை பாதிக்கும். எனவே 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை மாற்றுங்கள்.

உண்ணாமல் இருப்பதையும், அதிகமாக உண்ணுவதையும் தவிருங்கள்.

மின்னஞ்சலைப் பற்றி மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது.

வேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான்.


நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், "உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு" என்றார்.

இதற்கு பதிலளித்த இளைஞன், "என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை" என்றான் வருத்தத்துடன்.

மேலதிகாரி, "என்ன மின்னஞ்சல் இல்லையா. யாருக்கு மின்னஞ்சல் இல்லையோ அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு இங்கு வேலை இல்லை" என்று இளைஞனை அனுப்பிவிட்டார்

அந்த இளைஞனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன்னிடம் உள்ள 10 ரூபாயை வைத்து என்ன செய்வது, ஒரு மின்னஞ்சலை உருவாக்க இயலாதே என்று கவலையுற்றான்.

திடீரென அவனுக்கு ஒரு திட்டம் உதயமானது. அதாவது மொத்த விற்பனை சந்தைக்குச் சென்று அங்கு 10 ரூபாய்க்கும் தக்காளி வாங்கினான். அதனை வீடு வீடாகச் சென்று விற்றான். 2 மணி நேரத்தில் அவன் போட்ட முதலீடு இரண்டு மடங்காக ஆனது.

உடனே 20 ரூபாய்க்கும் தக்காளி வாங்கி மீண்டும் வீடு வீடாகச் சென்று விற்றான். 40 ரூபாய் கைகளில் கிடைத்தது. இதையே மீண்டும் செய்ததில் 80 ரூபாய்களை சம்பாதித்தான்.

அப்போதுதான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ஏன் தினமும் இப்படியே செய்து லாபம் ஈட்டக் கூடாது என்று எண்ணினான்.

மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு தக்காளிகளை வாங்கி வீடு வீடாக விற்றுவிட்டு மாலையில் அவன் வீடு திரும்பும் போது அவன் போட்ட முதல் தொகையை விட பல மடங்கு பணம் அவன் கைகளில் இருக்கும்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல தக்காளி விற்பதற்கு ஒரு தள்ளு வண்டியை வாங்கினான். பின்னர் அதுவே டிரக்காக மாறியது. பின்னர் தக்காளியை பதமாக வைத்து எடுத்துச் செல்லும் விற்பனை வண்டியை வாங்கினான்.

5 ஆண்டுகளில் அவன் மொத்த வியாபாரத் தொழிலில் முக்கிய அதிபராக விளங்கினான்.

மிகப்பெரிய தொழிலதிபராக ஆன பிறகு தனது குடும்பத்திற்கான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க எண்ணி, ஆயுள் காப்பீட்டில் சேர விரும்பினான்.

ஆயுள் காப்பீட்டு தரகரை தொடர்பு கொண்டு பேசினான். அப்போது, குடும்ப உறுப்பினர் விவரம், தொகை விவரம் போன்றவற்றுடன் அவரது மின்னஞ்சல் முகவரியையும் தரகர் கேட்டார்.

அப்போது அந்த இளைஞன், "என்னிடம் மின்னஞ்சல் முகவரி இல்லை" என்று பதிலளித்தார்.

அதிர்ச்சி அடைந்த தரகர், "என்ன உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இல்லையா. இவ்வளவு பெரிய ஆளாக இருக்கின்றீர்கள். நீங்கள் மின்னஞ்சல் வைத்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருப்பீர்கள் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்?" என்றான்.

இளைஞன் தான் கடந்து வந்த வாழ்க்கையை ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்துவிட்டு புன்னகையுடன் பதிலளித்தார், "ஆம், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உதவியாளனாக பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன்."

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. கண் நிபுணர்கள், கீழ் கண்ட பிரச்னைகளுடன் கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் சிகிச்சை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கண் எரிச்சல், நமைச்சல், உலர்ந்து போதல், சிவப்பாதல், அழுத்தம் ஆகியவற்றுடன் கழுத்து வலி. இந்தப் பிரச்னைகளை "கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்று வகைப் படுத்துகிறார்கள். இந்த சின்ட்ரோம் மூன்று வகையாகப் பிரிக்கத் தக்கது.1. மெல்லியது 2. இடைநிலைப்பட்டது 3. கொடியது இதனால் உடனடியாக பார்வை பறிபோய்விடாது என்பதால், இந்த விஷயத்தில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. சாப்ட்வேர் கம்பெனிகள் கம்ப்யூட்டர் திரையில் பிரதிபலிப்பு ஏற்படாமல் இருக்கு கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் வெளிச்ச அளவையும் அந்த அறையின் வெளிச்சத்தையும் தரப்படுத்தி வைத்துக் கொள்கின்றனர். கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் இது போன்ற கட்டுக்குள் இருக்கும் ஒளி அளவுடன் பணி செய்ய வேண்டும். கரு விழிக்கு போதுமான ரத்தம் பாயாததால் தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கண்களை மூடித் திறப்பதால் கரு விழிக்கு போதுமான ரத்தம் கிடைக்கிறது. அதனால் தேவையான ஆக்சிஜனையும் இது பெற்றுக் கொள்கிறது. ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறையாவது விழிகளை மூடித் திறக்க வேண்டும். கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது இது குறைவதால் பிரச்னை ஏற்படுகிறது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுத்துக் கொண்டு 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண் உலர்வதை தடுத்து நிறுத்த முடியும். கம்ப்யூட்டர் திரை குறைந்தது 50 செ.மீ. தொலைவில் இருக்க வேண்டும். நம் விழிகளின் உயரத்துக்கு குறைவான உயரத்தில் திரை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை சொல்கின்றனர்.

Tuesday, July 15, 2008