Monday, December 29, 2008

பொன்னான மொழிகள்

விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக, கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.

உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம், அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.

நித்திரை கொள்பவனை எழுப்பலாம் - ஆனால் நித்திரைபோல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

குறையப் பேசு, நிறையக் கேள்.

மனதில் பகைமையை அடக்கி வைத்தல் நேரடிப் போரைவிடக் கொடியது.

எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.

தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.

பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.

இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.

அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.


தோல்வியை - கழியுங்கள்
முயற்சியை - கூட்டுங்கள்
வெற்றியை - பெருக்குங்கள்
பலனை - வகுத்துவிடுங்கள்
புரிந்ததை- விரிவுபடுத்துங்கள்
புரியாததை- சுருக்குங்கள்
சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள்
உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள்

No comments: