Friday, December 26, 2008

துளிகள்

1) சோம்பித் துருப்பிடித்துப் போவதை விட உழைத்து தேய்ந்து போவது மேல்.

2) மனிதன் உழைக்கப் பிறந்துள்ளான், பறவை பறக்கப் பிறந்துள்ளது.

3) நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது - நாம் முயற்சி செய்கிற வரையில் நமக்கேத் தெரியாது.

4) ஆர்வம், கொழுந்து விட்டு எரியும் ஆசை, நாட்டம் பெற்றிடுக.

5) ஒரே சமயத்தில் இரு முயல்களை பிடிக்க முயன்றால் இரண்டுமே தப்பியோடிவிடும், எனவே ஒரு துறையில் மட்டுமே முழு மூச்சுடன் கவனம் செலுத்தி முழுமைத்திறன் பெற்றிடுக.

6) எதிலும் வெற்றியைப் பெறத் தொடர் முயற்சி தேவை.

7) காலமும், கடலலையும் எதற்காகவும் காத்திராது. சாதிக்கப் பிறந்த நீ முயற்சியைத் தொடர்வாயாக.

8)சாதனைக் குறிக்கோளுக்கு வானமே எல்லை

9) முட்டுக்களைகளை முறித்தெறி

10) என்னால் முடியும் என உறுதி கொள், எண்ணங்களே செயலுக்கு அடிப்படை.

No comments: